விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று நடக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு போட்டிகள் கடுமையாக இருக்கிறது. இந்தாண்டு ராதாகிருஷ்ணன் அணி, விஷால் அணி , கேஆர் அணி என 3 அணியாக பிரிந்து தயாரிப்பாளர்கள் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.
தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. தனியார் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறுகிறது. தலைவர் , துணைத்தலைவர் , செயலாளர் ,பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
காலை 9 மணி நிலவரப்படி 129 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. நடிகை சுகாசினி, டைரக்டர் ஆர்.பி.சவுத்ரி, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சசிகுமார், அருண் பாண்டியன், மன்சூர் அலிகான், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினியும் ஓட்டளித்தார். நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் ஓட்டளித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகர், சவுந்தர்யா ரஜினிகாந்த், தேவயானி, ராஜகுமாரன், நாசர், ராதாரவி, நட்டி என்ற நடராஜ் ஆகியோர் ஓட்டளித்தனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் விறுவிப்பாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து 12.20 மணியளவில் நடிகர் கமலும் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.